ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்
செயல்படும் பகுதி : கல்வி
திட்டத்தின் தொடக்கம் : 2013
உள்ளடக்கங்களின் அட்டவணை
திட்டம்
புதுப்பிப்புகள்
புகைப்படத் தொகுப்பு
திட்டம்
குறைந்த கல்விக்கட்டணத்தில் உலகத் தரம் வாய்ந்த பொறியியல் கல்வியை வழங்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் 2013-ல் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஆர்.ஐ.டி) நிறுவப்பட்டது, முதல்வர் பேராசிரியர் எல்.கணேசன், கல்லூரியின் தினசரி நடவடிக்கைகளை நிர்வகிக்கிறார். ராம்கோ குழுமத்தின் சேர்மனும், கல்லூரி ஆளும் கவுன்சில் சேர்மனுமான ஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, கல்லூரியை திறம்பட நடத்துவதற்கு ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார். ராஜா சேரிட்டி டிரஸ்ட் மூலம் இந்த கல்லூரி நிறுவப்பட்டது.
ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் பயிற்சியில் சிறந்து விளங்குகிறது
"வித்யா விந்ததே வீர்யம்" ("அறிவு அதிகாரமளிக்கிறது") என்ற அதன் பொன்மொழியின்படி, ஆர்.ஐ.டி. தனது மாணவர்களை வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில்துறையில் மாறிவரும் சூழலுக்கு ஏற்பத் தயார்படுத்துகிறது. வேலைவாய்ப்புக்கு தகுதியான பொறியாளர்களை உருவாக்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இந்த கல்லூரி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, ஏ.ஐ.சி.டி.இ.-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நான்காண்டு இளங்கலை பொறியியல் பாடத்திட்டங்களை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள உயர்கல்வி நிலையங்களில் தங்களது உயர் படிப்பைத் தொடர மாணவர்கள் வலுவான கல்வி அடித்தளத்தைப் பெறுகிறார்கள். மேலும், மாணவர்கள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற பயிற்சி பெறுகின்றனர்.
ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி படிப்புகள்
ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வழங்கும் படிப்புகள்
- 
பி.இ. சிவில் இன்ஜினியரிங் (60 இடங்கள்) 
- 
பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் (120 இடங்கள்) 
- 
பி.இ. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினிரியங் (60 இடங்கள்) 
- 
பி.இ. எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினிரியங் (120 இடங்கள்) 
- 
பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (60 இடங்கள்) 
- 
பி.டெக். ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் (120 இடங்கள்) 
- 
பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிஸ்னெஸ் சிஸ்டம்ஸ் (60 இடங்கள்) 
- 
பி.டெக். இன்பார்மேஷன் டெக்னாலஜி (60 இடங்கள்) 
மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கல்லூரி வழங்குகிறது. மேலும், ராம்கோ சிமெண்ட்ஸ், ராம்கோ சிஸ்டம்ஸ், Kaar technologies, EmbedUR, Tessolve, Vuram Technology, Aspire Systems, Zoho, TCS, Wipro and Centizen உள்ளிட்ட பல நிறுவனங்கள் RIT வளாகத்திலிருந்து மாணவர்களை பணியமர்த்துகின்றன.
சான்றிதழ் மற்றும் அங்கீகாரங்கள்
- இந்த கல்லூரி NAAC-ஆல் அங்கீகாரம் பெற்றது மற்றும் ISO 9001:2015-ஆல் சான்றளிக்கப்பட்டது.
- 
CSE, EEE, ECE ,துறைகள் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் NBA-ஆல் அங்கீகாரம் பெற்றவை. 
புதுப்பிப்புகள்
புதிய ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் ஆய்வகம்
இந்தத் திட்டம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் துறைக்கான ஒரு ஆய்வகத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திட்டத்தின் முதன்மை நோக்கம் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் டிஜிட்டல் திறன் மேம்பாடு ஆகும். இந்த ஆய்வகம் மாணவர்கள் தங்கள் கணினித் திறனை மேம்படுத்தவும், ஆசிரிய உறுப்பினர்கள் அதிநவீன ஆராய்ச்சியில் ஈடுபடவும் அனுமதிக்கும். வசதி வடிவமைப்பு பாடத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப இருந்தது.
ஆய்வகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இது இப்போது RIT மாணவர்களுக்கு நேரடி பயிற்சியை வழங்குகிறது மற்றும் பிற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை நடத்துகிறது. இறுதியாக, இது இணைய அடிப்படையிலான அரசு தேர்வுகள் மற்றும் பல போட்டித் தேர்வுகள் நடைபெறும் மையமாக இருக்கும்.
எதிர்கால திட்டங்கள்:
- 
வரும் ஆண்டுகளில் இந்த ஆய்வகத்தை ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்-ல் சிறந்து விளங்கும் மையமாக உருவாக்குவதே இலக்கு. 
புகைப்படத் தொகுப்பு
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                        
                    மேலும் திட்டங்கள்…
ஆத்மப்ராஸரா
ஆத்மப்ரஸாரா மனக்கவலை சூழ்ந்த நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை தேடுவோருக்கு இலவச மற்றும் ரகசிய கருத்துரை ஆலோசனைகளை வழங்க தன்னார்வலர்களால் வழிநடத்தபடும் ஒரு முன்முயற்சி
பந்தல்குடி மறுசீரமைப்பு
சுரங்கங்களை மறுசீரமைப்பு செய்வதன் வாயிலாக தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு சூழலை உருவாக்குகிறது,
கல்ராயன் மலைகளில் உள்ள மழைவாழ் மக்கள் குடியிருப்புக்களில் வேளாண்மை, ஊட்டச்சத்து, சுகாதாரம் & கல்வி
சமுதாய மேம்பாட்டு திட்டங்களின் கீழ் ராம்கோ ஆதரவுடன், கல்ராயன் மலைகளில் குழந்தை ஊட்டச்சத்து, நீர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விவசாய வாழ்வாதாரம் ஆகிய முக்கிய திட்டங்களை இகோ ப்ரோ மேற்கொண்டுள்ளது.
 
				


