ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனம்

Ramco ITI entrance wide angle view

ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : கல்வி

திட்டத்தின் தொடக்கம் : 1993

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புகைப்படத் தொகுப்பு

திட்டம்

ராம்கோ குழுமத்தின் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா, ராஜபாளையம் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு கல்வியை வழங்குவதற்காக 1993ல் ராம்கோ தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவினார்.

ஐ.டி.ஐ.யின் முதல்வர் திரு.எம்.மாடசாமி, கல்விநிலையத்தின் தினசரி நடவடிக்கைகளை நிர்வகிக்கிறார். ஐ.டி.ஐ.யின் தாளாளர் திரு என்.கே.ஸ்ரீகண்டன் ராஜா., தாளாளர் அவர்களுடன் கலந்தாலோசித்து, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை முதல்வர் ஏற்பாடு செய்கிறார்.

ராம்கோ ஐடிஐ, சிறந்த பொறியியல் திறன் பயிற்சி

ராம்கோ ஐடிஐ தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய தொழில்துறை பயிற்சி நிறுவனம் ஆகும். தற்போது 500 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்ஸ்டிட்யூட்டின் நல்ல உள்கட்டமைப்பு, நன்கு வடிவமைக்கப்பட்ட ஆய்வகங்கள், பட்டறைகள் மற்றும் விசாலமான வகுப்பறைகள் ஆகியவை அவர்கள் பொறியியல் திறன் பயிற்சியில் சிறந்து விளங்க உதவுகின்றன.

ராம்கோ ஐடிஐ.-யில் படிப்புகள்

ராம்கோ ஐடிஐ.-யில் வழங்கப்படும் படிப்புகள்:

  • எலக்ட்ரீசியன்

  • ஃபிட்டர்

  • மெக்கானிக் (மோட்டார் வாகனம்)

  • எலக்ட்ரானிக் மெக்கானிக்

  • மெக்கானிக் ஆர் & ஏசி

  • மெக்கானிக் (டீசல்)

  • வெல்டர்

  • வயர்மேன்

வேலை வாய்ப்புகள்

இக்கல்வி நிறுவனம் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், ராம்கோ குரூப் தொழில் நிறுவனங்கள் (ராம்கோ சிமெண்ட்ஸ், ராம்கோ டெக்ஸ்டைல் பிரிவுகள்), ராயல் என்ஃபீல்டு, வீல்ஸ் இந்தியா, அமர் ராஜா பேட்டரிஸ், கிரீன் வேலி, இகராஷி மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு செய்ய வருகை தருகின்றன.

RAMCO-Industrial-Training-Institute-graph

ராம்கோ ஐடிஐ மற்றும் அதன் மாணவர்கள் பெற்ற அங்கீகாரம்: 

  • தமிழ்நாடு மாநில அளவில் 1வது இடம் 

  • இந்திய அளவில் 4வது இடம் 

  • திரு. எம்.காளிராஜ் (எலக்ட்ரீசியன் பிரிவு) 2022ல் அகில இந்திய திறன் போட்டியில் 2வது ரேங்க் பெற்றார்.

மேலும் திட்டங்கள்…

P.A.C. Ramasamy Raja Polytechnic College

பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி

இந்த பாலிடெக்னிக் கல்லூரி 1963 ஆம் ஆண்டு முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் நிறுவப்பட்ட மாநில அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்விநிலையமாகும். தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையிலான ஆட்சிக்குழு தற்போது கல்லூரியை நிர்வகித்து வருகிறது.

Building a New Learning Centre

புதிய கற்றல் மையத்தை கட்டுதல்

தாமரை கல்வித் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆரோவில்லின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அன்னை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு புதிய கற்றல் மையத்தை உருவாக்கியது.

Giving “Waste” a Second Life

கழிவுகளுக்கு மறுவாழ்வு அளித்தல்

இந்த திட்டம் Ok Upcycling ஸ்டுடியோவுடன் இணைந்து, கல்வி மற்றும் அப்சைக்கிள் செய்யப்பட்ட கலை மற்றும் டிசைன் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளைப் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை நமது சமூகத்திற்கு உணர்த்துவதும், செயல்பாட்டுக் கலை மற்றும் வடிவமைப்பை 'கழிவுகளில்' இருந்து உருவாக்குவதும் இத்திட்டத்தின் குறிக்கோள்