பந்தல்குடி மறுசீரமைப்பு

old quarry Pandalgudi

ஆரோவில் தாவரவியல் பூங்கா ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : சுற்றுச்சூழல்

திட்டத்தின் தொடக்கம் : 2019

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

திட்டம்

சுரங்கங்களை மறுசீரமைப்பு செய்வதன் வாயிலாக தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு சூழலை உருவாக்குகிறது,

 

உள்ளுர் பகுதிக்கான ஒரு பல்லூயிர் பெருக்க மையம்

ஆரோவில் தாவரவியல் பூங்காக்கள் நிறுவனம் இங்கு சுரங்கபகுதிகளை சீரமைக்கும்போது, குவாரியின் சுவர்களில் அல்லது கீழிருக்கும் நீர்நிலைகளில் ஏராளமான உயிரினங்கள், வாழ்விட ஆதாரங்கள் எஞ்சியிருப்பதை கண்டுபிடித்தார்கள், பழங்கள் மற்றும் விதைகளை வழங்கும் பலவிதமான நாட்டு மரங்கள் மற்றும் புதர் இனங்களை பயன்படுத்துவதன் வாயிலாக பூச்சிகள், பறவைகள் மற்றும் சிறிய பாலுட்டிகளுக்கு தேவையான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்யும். அதுவே அவற்றின் வாழ்வாதாரத்திற்கான சிறந்த உணவுசங்கிலியாக அமையும், ஆகையினால் மறுசீரமைக்கப்பட்ட சுரங்கங்கள் உள்ளுர் பகுதியில் ஒரு பல்லூயிர் பெருக்க மையமாக மாறி வருகிறது,

 

400 ஏக்கர் பரப்பளவில் ஒரு திட்டம்

ஆரோவில் தாவரவியல் பூங்காக்கள் இன்று வரை பந்தல்குடி பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை இவ்வாறு புனரமைத்து உள்ளது. மேலும் இது போன்றே அரியலூர், ஜெயந்திபுரம் மற்றும் கர்னூல் பகுதிகளில் மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறது.

 

அபரித வளர்ச்சி

ஆரோவில் தாவரவியல் பூங்காக்கள், சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளையும் புதர் இனங்களையும் நடவு செய்துள்ளது. முதல் 3 வருடங்களிலேயே அவற்றில் சில மரங்கள் சுமார் 3 அடி அயரத்திற்கு வளர்ந்து விட்டன மற்றும் அதிக அளவிலான பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் மற்றும் பூச்சி இனங்களும் இந்த இடங்களுக்கு திரும்பிவந்து கொண்டிருப்பதை ஏற்கனவே பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.

Middle pond in the rock gardens at Pandalgudi

பாறை பூங்காவில் அமைந்துள்ள நடு குளம், பந்தல்குடி

View across the old quarry to the picnic area at the Pandalgudi restoration project

பழைய குவாரியில் அமைந்துள்ள சுற்றுலா பகுதியின் தோற்றம்

வீடியோ

மேலும் திட்டங்கள்…

RAMCO Industrial Training Institute

ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனம்

ராம்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள், ராஜபாளையம் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்காக 1993ல் ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனத்தை நிறுவினார். இப்போது இது தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்களின் திறமையான தலைமையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 

Ammani Ammal’s Girls School

அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி

ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 1974 ஆம் ஆண்டு எங்கள் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் அரசு உதவி பெறும் பள்ளியாக அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. 1979 ஆம் ஆண்டு பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கள் சேர்க்கப்பட்டன.

P.A.C. Ramasamy Raja Polytechnic College

பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி

இந்த பாலிடெக்னிக் கல்லூரி 1963 ஆம் ஆண்டு முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் நிறுவப்பட்ட மாநில அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்விநிலையமாகும். தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையிலான ஆட்சிக்குழு தற்போது கல்லூரியை நிர்வகித்து வருகிறது.