பந்தல்குடி மறுசீரமைப்பு

old quarry Pandalgudi

ஆரோவில் தாவரவியல் பூங்கா ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : சுற்றுச்சூழல்

திட்டத்தின் தொடக்கம் : 2019

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

திட்டம்

சுரங்கங்களை மறுசீரமைப்பு செய்வதன் வாயிலாக தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு சூழலை உருவாக்குகிறது,

 

உள்ளுர் பகுதிக்கான ஒரு பல்லூயிர் பெருக்க மையம்

ஆரோவில் தாவரவியல் பூங்காக்கள் நிறுவனம் இங்கு சுரங்கபகுதிகளை சீரமைக்கும்போது, குவாரியின் சுவர்களில் அல்லது கீழிருக்கும் நீர்நிலைகளில் ஏராளமான உயிரினங்கள், வாழ்விட ஆதாரங்கள் எஞ்சியிருப்பதை கண்டுபிடித்தார்கள், பழங்கள் மற்றும் விதைகளை வழங்கும் பலவிதமான நாட்டு மரங்கள் மற்றும் புதர் இனங்களை பயன்படுத்துவதன் வாயிலாக பூச்சிகள், பறவைகள் மற்றும் சிறிய பாலுட்டிகளுக்கு தேவையான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்யும். அதுவே அவற்றின் வாழ்வாதாரத்திற்கான சிறந்த உணவுசங்கிலியாக அமையும், ஆகையினால் மறுசீரமைக்கப்பட்ட சுரங்கங்கள் உள்ளுர் பகுதியில் ஒரு பல்லூயிர் பெருக்க மையமாக மாறி வருகிறது,

 

400 ஏக்கர் பரப்பளவில் ஒரு திட்டம்

ஆரோவில் தாவரவியல் பூங்காக்கள் இன்று வரை பந்தல்குடி பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை இவ்வாறு புனரமைத்து உள்ளது. மேலும் இது போன்றே அரியலூர், ஜெயந்திபுரம் மற்றும் கர்னூல் பகுதிகளில் மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறது.

 

அபரித வளர்ச்சி

ஆரோவில் தாவரவியல் பூங்காக்கள், சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளையும் புதர் இனங்களையும் நடவு செய்துள்ளது. முதல் 3 வருடங்களிலேயே அவற்றில் சில மரங்கள் சுமார் 3 அடி அயரத்திற்கு வளர்ந்து விட்டன மற்றும் அதிக அளவிலான பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் மற்றும் பூச்சி இனங்களும் இந்த இடங்களுக்கு திரும்பிவந்து கொண்டிருப்பதை ஏற்கனவே பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.

Middle pond in the rock gardens at Pandalgudi

பாறை பூங்காவில் அமைந்துள்ள நடு குளம், பந்தல்குடி

View across the old quarry to the picnic area at the Pandalgudi restoration project

பழைய குவாரியில் அமைந்துள்ள சுற்றுலா பகுதியின் தோற்றம்

வீடியோ

மேலும் திட்டங்கள்…

Ramco PMU for Carbon Neutral Rajapalayam

Ramco PMU for Carbon Neutral Rajapalayam

Ramco Community Services has been appointed as the Project Management Unit (PMU) to drive two of Rajapalayam’s most critical urban missions: the implementation of the Rajapalayam Master Plan 2041 and the town’s ambitious journey towards carbon neutrality.

Rajapalayam’s Master Plan: A Vision for Sustainable Growth

Rajapalayam’s Master Plan: A Vision for Sustainable Growth

Ramco Community Services has taken a pioneering step in shaping the future of Rajapalayam by leading the development of the city’s Master Plan. This initiative was not just about urban planning—it was about bringing people together. Through extensive multi-stakeholder consultations, RCS engaged civil society organisations, the general public, and key government officials, including those from the Municipality and other relevant departments. This collective effort ensured that the Master Plan reflects the aspirations and needs of every citizen.

Tree planting initiative in Rajapalayam

ராஜபாளையத்தில் மரம் நடும் முயற்சி

ராஜபாளையத்தில் உள்ள எங்கள் டிரஸ்ட் நிலத்தில் உள்ள 6 கல்வி நிறுவன வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரம் நடும் பணி நடந்து வருகிறது. காடு வளர்ப்புத் திட்டம் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சிதைந்த நிலத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது, மற்றும் பசுமையை மேம்படுத்துகிறது.