பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி

Sethuramammal-Primary-School

ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : கல்வி

திட்டத்தின் தொடக்கம் : 1958

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புகைப்படத் தொகுப்பு

திட்டம்

பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி 1958-ல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் காந்தி கலை மன்றத்தில் ‘பி.ஏ.சி.ஆர் அம்மாணி அம்மாள் துவக்கப்பள்ளி’ என்ற பெயரில் தற்காலிக ஏற்பாட்டில் செயல்பட்டது. 1979-ஆம் ஆண்டில், இது ராஜபாளையத்தில் உள்ள தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு அதன் தற்போதைய பெயரிடப்பட்டது. அரசு உதவி பெறும் இப்பள்ளியானது தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை மகிழ்ச்சிகரமான முறையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "கல்வி கற்றவன் அறிவாளியாகிறான்" என்பதே அதன் பொன்மொழி.

பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. D.அருணா, பள்ளியின் தினசரி செயல்பாடுகளை நிர்வகித்து வருகிறார். பள்ளியின் செயலாளர் திரு என்.கே.ஸ்ரீகண்டன் ராஜா. செயலாளருடன் கலந்தாலோசித்து, பள்ளி விவகாரங்களை தலைமையாசிரியை நிர்வகிக்கிறார்.

இந்தப் பள்ளி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி முறையைப் பின்பற்றுகிறது. அடிக்கடி உள்ளக மதிப்பீடு தேர்வுகள் நடத்துவதன் மூலம் மாணவர்கள் தொடர்ந்து மதிப்பிடப்படுகிறார்கள்.

 

 

பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்படும் முழுமையான கல்வியின் அம்சங்கள்:

 

  • கற்றல் மொழி: ஆங்கிலத் மொழி அறிவை மேம்படுத்த பள்ளியில் வசதிகள் உள்ளன. மாணவர்கள் இந்தி மொழி கற்கவும் ஆண்டுதோறும் இந்தி பிரச்சார சபா திறன் தேர்வுகளை எழுத பயிற்சி பெறவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்

 

  • கழிவு மேலாண்மை: பள்ளி திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றுகிறது. கழிவுகளை பிரித்தெடுக்கும் முறை கற்பிக்கப்படுவதுடன் கழிவு உற்பத்தியை குறைக்கவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆரோவில்லில் இருந்து ஒரு குழு வடிவமைத்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் கார்பாலஜி பாடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மேலும், பள்ளியானது ஒரு உரம் தயாரிக்கும் இடத்தை பராமரிக்கிறது.

 

  • கூடுதல் பாடத்திட்டங்கள்: சொற்பொழிவு போட்டிகள், ஓவியம் வரைதல், ஸ்லோகம் சொல்லுதல் மற்றும் கதை சொல்லும் நிகழ்வுகள் போன்ற கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளில் பங்கேற்க ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஊக்குவிக்கிறார்கள்.

 

  • சமூக ஈடுபாடு மற்றும் விளக்கக்காட்சி திறன்: கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி மூலம் மாணவர்கள் சமூகத்துடன் (பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள்) ஈடுபட்டு கல்வி கற்பிப்பதற்கும் ஆண்டு PTA கூட்டம் ஒரு வாய்ப்பாகும். இத்தகைய நிகழ்வுகள் குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் குழு உணர்வை ஊக்குவிக்கின்றன. மாணவர்கள் தங்கள் கண்காட்சிகளை பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்குகிறார்கள். மாணவர்கள் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள், அங்கு அவர்கள் கலாச்சார நிகழ்வுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் அவர்களின் திறமைக்கான விருதுகளைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஐந்தாம் வகுப்பின் ஒட்டுமொத்த சிறந்த மாணவருக்கு “சிறந்த வெளிச்செல்லும் மாணவர் விருது” வழங்கப்பட்டு அதனுடன் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

 

 

பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் துவக்கப்பள்ளியின் வளர்ச்சி:

    20 ஆசிரியர்களுடன் 841 மாணவர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பள்ளி வளர்ந்துள்ளது. சேர்மன் ஸ்ரீ பி,ஆர். வெங்கட்ராம ராஜா மற்றும் தலைமையாசிரியை திருமதி D. அருணா ஆகியோரின் கீழ் பள்ளி தொடர்ந்து வளர்ந்து செழித்து வருகிறது.

     

    மேலும் திட்டங்கள்…

    Ammani Ammal’s Girls School

    அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி

    ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 1974 ஆம் ஆண்டு எங்கள் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் அரசு உதவி பெறும் பள்ளியாக அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. 1979 ஆம் ஆண்டு பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கள் சேர்க்கப்பட்டன.

    P.A.C. Ramasamy Raja Polytechnic College

    பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி

    இந்த பாலிடெக்னிக் கல்லூரி 1963 ஆம் ஆண்டு முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் நிறுவப்பட்ட மாநில அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்விநிலையமாகும். தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையிலான ஆட்சிக்குழு தற்போது கல்லூரியை நிர்வகித்து வருகிறது.

    Building a New Learning Centre

    புதிய கற்றல் மையத்தை கட்டுதல்

    தாமரை கல்வித் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆரோவில்லின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அன்னை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு புதிய கற்றல் மையத்தை உருவாக்கியது.