கழிவுகளுக்கு மறுவாழ்வு அளித்தல்

Giving "Waste" a Second Life

Ok Upcycling Studio ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : சுற்றுச்சூழல்

திட்டத்தின் தொடக்கம் : 2021

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புகைப்படத் தொகுப்பு

$

வீடியோ

திட்டம்

The project of Giving “Waste” a Second Life in collaboration with Ok Upcycling Studio is designed for education and creation of Upcycled Art and Design. The goal is to sensitize the community about waste and create functional art and design from the generated ‘waste’.

 

அப்சைக்ளிங் பயிற்சிபட்டறை

  • ஆரோவில், சென்னை மற்றும் வேறு சில இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு
  • ராஜபாளையத்தில் (தமிழ்நாடு) ஆசிரியர்களுக்கு;
  • ஆரோவில் சமூகத்திற்கும் அதன் விருந்தினர்களுக்கும்
  • ஆரோவில் விசிட்டர்ஸ் சென்டரில் உள்ள ‘Stand4Upcycling’ கடைக்கு;
  • ராஜபாளையம் அப்சைக்கிளிங் ஸ்டுடியோவுக்கு; ராஜபாளையத்தில் மக்களுக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள அப்சைக்ளிங் ஸ்டுடியோவில் பயிற்சி அளிக்க உள்ளோம்
Workshop for making magnets for fridge from fabric and bottle cap in Srishti college (Bangalore)

சிருஷ்டி கல்லூரியில் (பெங்களூரு) துணி மற்றும் பாட்டில் மூடியிலிருந்து குளிர்சாதனப்பெட்டிக்கான காந்தங்கள் தயாரிப்பதற்கான பயிற்சிபட்டறை

workshop

அப்சைக்ளிங் பயிற்சிபட்டறை

அப்சைக்கிள் செய்யப்பட்ட கலை மற்றும் உட்புறத்திற்கான வடிவமைப்பு (பெங்களூரு பிளாட்)

பழைய மரச்சாமான்கள், மறக்கமுடியாத பொருட்கள், உடைகள் மற்றும் பிற பொருட்களிலிருந்து கலை மற்றும் வடிவமைப்பு துண்டுகள். இந்த திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. பல்வேறு கழிவுகளிலிருந்து அப்சைக்ளிங் நிழல்விளக்கு மற்றும் மரச்சாமான்கள் தயாரிக்க நாங்கள் இன்னும் பணியாற்றி வருகிறோம்.

ஆண்டின் இறுதியில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், அப்சைக்கிள் செய்யப்பட்ட லைட்டிங் பொருட்களை உருவாக்குவோம்.

அப்சைக்ளிங்டு கலை

கலைப் படைப்பு: சத்திய ஞானம், பல்வேறு இந்திய வேதங்கள் பற்றி சுவாமி பரமார்த்தானந்தா ஆற்றிய உரைகளின் ஒலி நாடாக்களிலிருந்து உருவாக்கப்பட்ட என்ற கலைப் படைப்பு

இந்த திட்டம் நிறைவடைந்தது.

மற்ற கலைப் பணிகள் நடந்து வருகின்றன

அப்சைக்ளிங் செய்யப்பட்ட பொருட்கள்

ஓகே அப்சைக்ளிங் ஸ்டுடியோ, கழிவுகளை ஒரு வளமாகக் கண்டறிவதற்கான விழிப்புணர்வை உருவாக்கி, கழிவுகளிலிருந்து செயல்பாட்டுத் தயாரிப்புகளை உருவாக்குவதற்கான பல சிறந்த கருத்துகளையும் யோசனைகளையும் செய்கிறது.

விளக்கு நிறுவல் கண்காட்சியை நடத்த உடைந்த மற்றும் செயல்படாத கழிவுகள் மீது தற்போது கவனம் செலுத்தப்படுகிறது.

வாரணாசி பட்டு கலந்த துணியில் இருந்து அப்சைக்ளிங் செய்யப்பட்ட பேஷன் பொருட்களை உருவாக்குவது மற்றொரு நடந்துகொண்டிருக்கும் செயல் திட்டமாகும்.

கலை கண்காட்சி

கொரோனா தொற்றுநோய் சமயத்தில், சுகாதார மாஸ்க் தயாரிப்பில் எஞ்சியிருக்கும் பொருட்களால் உருவாகும் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலைபொருள்கள் கண்காட்சிகள் 2021-ல் ஆரோவில்லில் நடத்தப்பட்டது. மற்றும் ’நிலைத்தன்மைக்கான பயணம் - ஜேர்னி ஆஃப் சஸ்டைனபிலிட்டி’கண்காட்சி பிரான்சில் 2022 ஆணடு நடக்கவிருந்த நிலையில், 2023 ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மேலும் திட்டங்கள்…

RAMCO Industrial Training Institute

ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனம்

ராம்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள், ராஜபாளையம் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்காக 1993ல் ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனத்தை நிறுவினார். இப்போது இது தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்களின் திறமையான தலைமையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 

Ammani Ammal’s Girls School

அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி

ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 1974 ஆம் ஆண்டு எங்கள் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் அரசு உதவி பெறும் பள்ளியாக அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. 1979 ஆம் ஆண்டு பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கள் சேர்க்கப்பட்டன.

P.A.C. Ramasamy Raja Polytechnic College

பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி

இந்த பாலிடெக்னிக் கல்லூரி 1963 ஆம் ஆண்டு முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் நிறுவப்பட்ட மாநில அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்விநிலையமாகும். தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையிலான ஆட்சிக்குழு தற்போது கல்லூரியை நிர்வகித்து வருகிறது.