கல்ராயன் மலைகளில் உள்ள மழைவாழ் மக்கள் குடியிருப்புக்களில் வேளாண்மை, ஊட்டச்சத்து, சுகாதாரம் & கல்வி
திட்டம்
சேலம், தர்மபுரி மற்றும் கள்ளக்குறிச்சி (முன்னாள் விழுப்புரம்) மாவட்டங்களை ஒட்டி இருக்கும் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கல்ராயன் மலைகள் பல தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் வீடாக உள்ளது, இந்த கல்ராயன் மலைக்கிராமங்களில் சுகாதாரம், குழந்தை ஊட்டச்சத்து, கல்வி, விவசாய வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதை ராம்கோ-வின் ஆதரவு உறுதி செய்துள்ளது.
சமுதாய மேம்பாட்டு திட்டங்களின் கீழ் ராம்கோ ஆதரவுடன், கல்ராயன் மலைகளில் குழந்தை ஊட்டச்சத்து, நீர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விவசாய வாழ்வாதாரம் ஆகிய முக்கிய திட்டங்களை இகோ ப்ரோ மேற்கொண்டுள்ளது.
கல்ராயன் மலைகளில் குழந்தை ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி
குழந்தைகளின் ஊட்டச்சத்து ஆரோக்கியம் படிப்படியாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. வருடாந்திர சுகாதார சோதனை மற்றும் ஊட்டச்சத்து ஆதரவுக்கு நன்றி. கோவிட-19 பொதுமுடக்கம் இருந்த சமயத்தில், மேல்தொரடிபட்டு, முண்டியூர் மற்றும் மட்டப்பட்டு பகுதிகளில் பள்ளிக்குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகுந்த மற்றும் ஆற்றல் தரக்கூடிய வேகவைத்த முட்டைகள், மசாலா வடைகள், பலவிதமான பருப்புவகைகள் மற்றும் அரிசி ஆகியவற்றை உள்ளடக்கிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. எழுத்தறிவு மற்றும் புத்தகம் வாசிப்பு நாள் மட்டபட்டு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுத்தம் மற்றும் சுகாதாரம்
கிராமங்களில் நிலவும் சுத்தம், சுகாதாரம் மற்றும் குறைந்த அளவு நீர் வழங்கல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சுமார் 60 முதல் 70 பேர்கள் பயன்படுத்தகூடிய வகையில் "யூரின் டைவர்ட்டிங் டிரை டாய்லெட்ஸ்" UDDT எனப்படும் 11 " சிறுநீர் – திசைதிருப்பும் உலர் கழிப்பறைகள்" கட்டப்பட்டுள்ளன. சுகாதாரத்தை பேணி காக்க, இந்த கழிப்பறைகளின் பராமரிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கழிப்பறைகளிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீர் மற்றும் மலம் உலர்த்துதல் முறையில் மீண்டும் பயன்படுத்த பாதுகாப்பானதாக மாற்றப்பட்டு, தோட்டங்களிலும் பண்ணைகளிலும் உரமாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை விவசாயம்
கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன சாகுபடி பற்றிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மேல்தொரடிபட்டு மற்றும் தாழ்தொரடிபட்டு சேர்ந்த 6 விவசாயிகள் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட அரிசி மற்றும் தினை பயிர்களின் திருப்திகரமான விளைச்சலுடன் இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களின் விளைபொருட்கள் வீட்டிலோ, உள்ளுரிலே பயன்படுத்தபடாமல், நல்ல வருமானம் தரக்கூடிய சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன
நீண்ட காலமாக, குறைந்தபட்சம் சில குக்கிராமங்களையாவது திறந்தவெளி கழித்தல் இல்லாததாக மாற்றுவதே நோக்கமாகும். மேலும், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் இயற்கை உணவுப்பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், பல விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் ஈடுபடத் தூண்டப்படுகிறார்கள். அதேசமயம், மண் அரிப்பை கட்டுபடுத்துதல், மேம்படுத்தப்பட்ட நீர் மற்றும் மண் மேலாண்மை குறித்தும் அவர்களுக்கு கற்பிக்கப்படும். அத்துடன் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தைப் பற்றிய புரிதலும் எளிதாக்கப்படுகிறது.
உள்ளுர் மக்கள் தங்கள் கிராமங்களின் வளர்ச்சி குறித்து தாங்களே சுயமாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை வழங்குவதே சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் முடிவான நோக்கமாகும்.

யூரின் டைவர்ட்டிங் டிரை டாய்லெட்ஸ்

உலர்ந்த மல உரம் வெளியேற்றும் குடியிருப்பாளர்கள்
ஆவணங்கள்
மேலும் திட்டங்கள்…
Ramco PMU for Carbon Neutral Rajapalayam
Ramco Community Services has been appointed as the Project Management Unit (PMU) to drive two of Rajapalayam’s most critical urban missions: the implementation of the Rajapalayam Master Plan 2041 and the town’s ambitious journey towards carbon neutrality.
Rajapalayam’s Master Plan: A Vision for Sustainable Growth
Ramco Community Services has taken a pioneering step in shaping the future of Rajapalayam by leading the development of the city’s Master Plan. This initiative was not just about urban planning—it was about bringing people together. Through extensive multi-stakeholder consultations, RCS engaged civil society organisations, the general public, and key government officials, including those from the Municipality and other relevant departments. This collective effort ensured that the Master Plan reflects the aspirations and needs of every citizen.
ராஜபாளையத்தில் மரம் நடும் முயற்சி
ராஜபாளையத்தில் உள்ள எங்கள் டிரஸ்ட் நிலத்தில் உள்ள 6 கல்வி நிறுவன வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரம் நடும் பணி நடந்து வருகிறது. காடு வளர்ப்புத் திட்டம் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சிதைந்த நிலத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது, மற்றும் பசுமையை மேம்படுத்துகிறது.