தென்னிந்தியாவின் வெப்ப மண்டல உலர் பசுமை காடுகளின் பாதுகாப்பு

planting initiative

ஆரோவில் தாவரவியல் பூங்கா ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : சுற்றுச்சூழல்

திட்டத்தின் தொடக்கம் : 2021

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புதுப்பிப்புகள்

திட்டம்

ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு

 

தென்னிந்தியாவின் வெப்பமண்டல உலர் பசுமை காடுகள் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு. இது உலகின் எந்த வெப்பமண்டல வறண்ட பசுமையான காடுகளின் மிகக் குறைந்த வருடாந்திர மழைப்பொழிவுக்கு ஏற்றவாறு 400க்கும் மேற்பட்ட மர இனங்களின் குழுவை உருவாக்குகிறது. இந்த காடு பல அரிய மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளான Hildegardia populifolia , Drypetes porteri and Pterocarpus marsupium போன்ற உயிரினங்க்கு தாயகமாக உள்ளது. பரவலாக பூக்கும் மற்றும் விதைப்பு நேரங்கள் ஆகியவை தேனீ இனங்கள் போன்ற முக்கியமான மகரந்தச் சேர்க்கக்கு உதவும் பல விலங்குகள் மற்றும் பூச்சி இனங்களுக்கு இது ஒரு சிறந்த வாழ்விடமாகும்.

 

அழிந்து வரும் காடு வகை

 

இதுதான் எஞ்சிய தாவரங்களுடன் 5%க்கும் குறைவான வரம்வில் சுமார் 25,500 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள மிகவும் அதிகமாக அழிந்து வரும் இந்திய வன வகைகளில் உள்ளது. கூடுதலாக, இந்த எச்சங்களில் 5% க்கும் குறைவானவை பழமையான நிலைக்கு அருகில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இரண்டாம் நிலை காடுகள் மீண்டும் வளரும் பகுதிகளாக உள்ளன. இவை முந்தைய நூற்றாண்டில் மரத்தடிகளாக அழிக்கப்பட்டன. இந்த பகுதி அதிக மக்கள் தொகை மற்றும் விவசாயம் மிகுந்ததாக இருப்பதால், வெப்ப மண்டல உலர் பசுமை காடுகள் அழிவின் மீது அதிக அழுத்தங்கள் இருக்கன்றன. இதன் விளைவாக, 0.1%-க்கும் குறைவான காடுகளை செயல்பாட்டில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பாகக் கருதலாம் எனறு மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையுடன் ஒப்பிடுகையில், வறண்ட பசுமைமாறாக் காடுகளின் 37% பாதுகாக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு முயற்சியை செயல்படுத்துதல்

 

ஆரோவில் சமுதாயம் இந்த வகை காடுகளைப் பாதுகாக்க நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, ஆனால் இந்தியாவில் நிலம் மற்றும் காடுகளின் மீதான அழுத்தம் அதிகாப்பதால் இன்னும் அதிக வளங்கள் தேவைப்படுகின்றன. இந்த வகை காடுகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை முடுக்கி விடுவதற்காக, பலபரிமாண பாதுகாப்பு முயற்சி செயல்படுத்தப்படுகிறது.

Virtual herbarium

மெய்நிகர் முலிகைச் செடி பகைப்பட மாதிரி

Book trees of South India

தென்னிந்தியாவின் மரங்கள் – ஆரோவில் தாவரவியல் பூங்காவால் எழுதப்பட்டது

புதுப்பிப்புகள்

மேலும் திட்டங்கள்…

RAMCO Industrial Training Institute

ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனம்

ராம்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா அவர்கள், ராஜபாளையம் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்காக 1993ல் ராம்கோ தொழில் பயிற்சி நிறுவனத்தை நிறுவினார். இப்போது இது தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்களின் திறமையான தலைமையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 

Ammani Ammal’s Girls School

அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி

ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 1974 ஆம் ஆண்டு எங்கள் முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் அரசு உதவி பெறும் பள்ளியாக அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. 1979 ஆம் ஆண்டு பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கள் சேர்க்கப்பட்டன.

P.A.C. Ramasamy Raja Polytechnic College

பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி

இந்த பாலிடெக்னிக் கல்லூரி 1963 ஆம் ஆண்டு முன்னாள் சேர்மன் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களால் நிறுவப்பட்ட மாநில அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்விநிலையமாகும். தற்போதைய சேர்மன் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைமையிலான ஆட்சிக்குழு தற்போது கல்லூரியை நிர்வகித்து வருகிறது.