அர்ஷா வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி

Arsha Vidya Mandir Senior Secondary School

ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகள் ஒத்துழைப்புடன்

செயல்படும் பகுதி : கல்வி

திட்டத்தின் தொடக்கம் : 2002

b

உள்ளடக்கங்களின் அட்டவணை

$

திட்டம்

$

புகைப்படத் தொகுப்பு

திட்டம்

அர்ஷா வித்யா மந்திர் (AVM) மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்ட இருபாலர் பள்ளியாகும், இது பாலர் வகுப்புகள் முதல் மேல்நிலை வகுப்புகள் வரை கல்வியை வழங்குகிறது.

அர்ஷா வித்யா மந்திர் பள்ளியில் கல்வியானது ஒட்டுமொத்த மனித திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கற்றல் என்பது அறிவுசார் வளர்ச்சி மற்றும் தேர்வுகளில் சிறந்து விளங்குதல் என்ற எல்லையோடு நின்றுவிடாமல், ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் வளர்க்கிறது மற்றும் அது கற்றல், சுய-பரிபூரணத்தை வாழ்நாள் முழுமைக்கான முயற்சியாக மாற்றும்.

திட்ட அடிப்படையிலான கற்றல், பாடங்களை ஒருங்கிணைத்தல், அழகியல் உணர்வை வளர்த்தல் மற்றும் மனித மற்றும் மோட்டார் திறன்களைப் பயிற்சி செய்தல், இவை அனைத்தும் அர்ஷா வித்யா மந்திர் பள்ளி கற்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பள்ளியானது ஆங்கிலம் மற்றும் மொழிகள், அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியலுக்கான அடிப்படை பாடத்திட்ட வரையறைகளை NCERT-லிருந்து ஏற்றுக்கொள்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியம் மற்றும் கலைகள், நுண்கலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் பள்ளி பாடத்திட்டத்தை அதிகரிக்கிறது.

அர்ஷா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் கற்றல் அனுபவங்கள்

 

  • அர்ஷா வித்யா மந்திர் பள்ளியில், சுற்றுச்சூழல் விரிவுரைகள், அனுபவமிக்க கரிம வேளாண்மைக் கொள்கைகளை கற்றல் மற்றும் நடைமுறைப்படுத்துதல், 'நிலைத்தன்மையை' குறிக்கோளாகக் கொண்டு, இயற்கை சூழல், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அவற்றின் உணர்திறன் சமநிலை பற்றிய ஆழமான விழிப்புணர்வு உருவாக்கப்படுகிறது. பள்ளியில் உருவாகும் திடக்கழிவுகள் எட்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது மற்றும் கார்பாலஜி கற்றல் மூலம் நாம் உள்வாங்கும் மதிப்புகளின்படி வாழ முயற்சி செய்கிறோம்.

 

  • பள்ளிக் கிளப்-களான, விவாதம், புகைப்படம் எடுத்தல், நடனம் மற்றும் சதுரங்கம் ஆகிய கிளப்கள் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட கிளப்பில் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு அவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.

 

  • மாணவர்களை வழிநடத்தும் குழுக்கள் மாணவர்களை முன்னிலைப்படுத்தவும், பள்ளியில் நடக்கும் பல கற்றல்களை பள்ளி சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

 

  • தி ஒன் புக்-ஆல் ரீட் திட்டம் மாணவர்களுக்கு புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை உருவாக்குவதற்கும், மொழி மற்றும் ஆக்கப்பூர்வமான மனநல செயல்பாடுகளை வளர்ப்பதற்கும் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களின் ஆசிரியர் நேரடியாக மாணவர்களுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடவும் அழைக்கப்படுகிறார்.

 

  • மாணவர்களின் உடல்நலம் மற்றும் உடற்தகுதியை முக்கிய நோக்கமாகக் கொண்டு, இயக்கக் கல்விக்கு முக்கியத்துவம் AVM-ல் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, வழக்கமான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுகளைத் தவிர, அக்கிடோ, களரிபயாடு, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் நடனம் ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். பள்ளி சமூகத்தினரிடையே மனநலத்தை மேம்படுத்துவதற்காக, தனிப்பட்ட மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதற்கான அமர்வுகள் வழங்கப்படுகின்றன.

 

  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுய-பிரதிபலிப்பு பயிற்சி செய்வது பள்ளியின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது ஒவ்வொருவரும் தங்களை மேம்படுத்திக் கொள்ள தொடர்ச்சியான கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுத்துகிறது. ஆசிரியர்களின் அறிவு மற்றும் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டு, பலதரப்பட்ட மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தங்களை தயார்படுத்தி கொள்ள, ஆசிரியர் சமூகத்திற்கு உயர்தர தொழில்முறை மேம்பாட்டு அமர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆசிரிய சமூகத்தால் மேற்கொள்ளப்படும் கொலபரேட்டிவ் லெசன் ஸ்டடி (CLS) கல்வி ஆராய்ச்சியாளர்களாகவும், ஆழ்ந்தசிந்தனை பயிற்சியாளர்களாகவும், குறிப்பிட்ட கற்றல் திட்டங்களை உருவாக்க குழுக்களில் பணியாற்றவும் வாய்ப்புகளை வழங்குகிறது.

 

  • எங்கள் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக பெற்றோர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர், எனவே தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி வழங்கும் கற்றல் வாய்ப்புகள் குறித்த அவர்களின் கருத்துக்கள் பள்ளியால் மதிக்கப்படுகின்றன. எங்கள் பள்ளித் திட்டங்களைப் பற்றிய தெளிவான தகவல்தொடர்பு, கருத்து மற்றும் தேவையான அனைத்து தகவல்களும் பல்வேறு பெற்றோர் திட்டங்கள் மூலம் பெற்றோருக்கு வழங்கப்படுகின்றன, இதனால் பெற்றோர்கள் பாதுகாப்பாக உணர்வதுடன் ஈடுபாட்டுடன் உள்ளார்கள் மற்றும் பள்ளி சமூகத்துடன் இணைந்து இருக்கும் உணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள்.

 

  • மலிவு கல்வி கட்டணத்தில் உயர்தர கற்றல் அனுபவத்தை வழங்குவது மற்றும் அதன் மூலம் எங்கள் கல்வித் திட்டங்களை சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் நோக்கம். இந்த உயர்ந்த நோக்கத்துடன், கல்விக்கான எங்கள் பங்களிப்பு அர்ஷா வித்யா மந்திர் பள்ளியை ஒரு முன்மாதிரி பள்ளியாகவும், தேசம் பெருமைப்படக்கூடிய ஒன்றாகவும் மாற்றும் என்று நம்புகிறோம்.

மேலும் திட்டங்கள்…

20 Educational Institutions

20 கல்வி நிறுவனங்கள்

1950-ல் எங்களது முதல் பள்ளி தொடங்கப்பட்ட காலம் முதல், இன்று ராம்கோ மற்றும் அதன் அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுமார் 20 கல்விநிலையங்களிலிருந்து, கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவ மாணவியர்கள் கற்று தேர்வடைந்துள்ளார்கள்.

Ātmaprasāra

ஆத்மப்ராஸரா

ஆத்மப்ரஸாரா மனக்கவலை சூழ்ந்த நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை தேடுவோருக்கு இலவச மற்றும் ரகசிய கருத்துரை ஆலோசனைகளை வழங்க தன்னார்வலர்களால் வழிநடத்தபடும் ஒரு முன்முயற்சி

Pandalgudi Restoration

பந்தல்குடி மறுசீரமைப்பு

சுரங்கங்களை மறுசீரமைப்பு செய்வதன் வாயிலாக தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு சூழலை உருவாக்குகிறது,